முகப்பு
மகளிர்மணி

சித்த மருத்துவக் குறிப்புகள்...

சுக்கு, மிளகு, எள் ஆகிய மூன்றையும் சமஅளவு பொடி செய்து, சாப்பிட மூல நோய் குணமாகும்.

Updated On : 2 மார்ச், 2026 at 9:56 AM
பகிர்:

சுக்கு, மிளகு, எள் ஆகிய மூன்றையும் சமஅளவு பொடி செய்து, சாப்பிட மூல நோய் குணமாகும்.

ஆட்டுப்பால் வலிப்பு நோயைக் குணமாக்கும்.

வெள்ளரிக்காய் சிறுநீர் அடைப்பைக் குணமாக்கும்.

வாழைத்தண்டு சிறுநீர் கடுப்பைக் குணமாக்கும்.

கோரைக் கிழங்கு கஷாயம் காய்ச்சலைப் போக்கும்.

நொச்சி இலையைக் கொதிக்கவைத்து, அந்த நீரில் குளிக்க உடல் வாத நோய்கள் குணமாகும்.

முலாம்பழம் சிறுநீர் பிரச்னையைத் தீர்க்கும்.

மாமரத்தின் கொழுந்து இலையை கஷாயம் வைத்துக் குடிக்க நீரிழிவு நோய் கட்டுப்படும்.

கொன்றை வேர் கஷாயம் குடித்துவர மேகரணம் தீரும்.

சுண்டைக்காய் சமைத்துச் சாப்பிட மூலக்கடுப்பு தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சாப்பிட அறிவுத்தெளிவு ஏற்படும்.

தேங்காய்ப் பால் குடித்துவர வாய் உள்ரணம் குணமாகும்.

மாதுளம்பழம் கஷாயம் வயிற்றுக் கடுப்பைக் குணமாக்கும்.

வில்வ மரப் பூக்களை கஷாயம் வைத்துக் குடித்தால், குடல் வலிமை பெறும்.

நாவல் கொட்டையைப் பொடி செய்து தினமும் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

கோவைக் காயை சமைத்துச் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஜீரணம் மேம்படும்.

வில்வ இலைப் பொடி தொண்டைக் கட்டை குணமாக்கும்.

முருங்கைப் பூவை சமைத்துச் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →