அம்மான் பச்சரிசித் துவையல்
அம்மான் பச்சரிசி இலையைச் சுத்தம் செய்து, கழுவி, நறுக்கி, வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
தேவையானவை:
அம்மான் பச்சரிசி இலை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 தேக்கரண்டி
Advertisement
Advertisement
கடுகு - சிறிது
மிளகாய் வற்றல் - 4
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் - அரை மூடி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பற்கள்
செய்முறை:
அம்மான் பச்சரிசி இலையைச் சுத்தம் செய்து, கழுவி, நறுக்கி, வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்தம் பருப்பு, பூண்டு, கடுகு, மிளகாய் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
வதக்கிய இலை, வறுத்த பொருள்கள், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் துவையல் ரெடி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.