முகப்பு
மகளிர்மணி

சிறுதானிய உருண்டை

அனைத்து சிறு தானியங்களையும் சுத்தம் செய்து, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.

Updated On : 21 மார்ச், 2026 at 10:30 PM
சிறுதானிய உருண்டை
பகிர்:

தேவையான பொருள்கள்

கேழ்வரகு, சோளம் - தலா 200 கிராம்

பாசிப்பருப்பு, திணை, வேர்க்கடலை - தலா 50 கிராம்

சர்க்கரை - 500 கிராம்

முந்திரி - 100 கிராம்

ஏலத்தூள், நெய் - தேவைக்கு

செய்முறை:

அனைத்து சிறு தானியங்களையும் சுத்தம் செய்து, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக அரைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மாவில் சர்க்கரை, ஏலத்தூள், முந்திரி சேர்த்து நெய்யை சூடாக்கி தேவையான அளவு மாவில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான சிறுதானிய உருண்டை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.