முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

நாவல் பழத்தின் கொட்டைகளைக் காய வைத்து, தோலை நீக்கிவிட்டு பருப்பை எடுத்து தூளாக்கி, தினமும் ஒரு சிட்டிகை வாயில் போட்டுக் கொண்டு, தண்ணீர் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்படும்.

Updated On : 3 மே, 2026 at 4:01 AM
பகிர்:

நாவல் பழத்தின் கொட்டைகளைக் காய வைத்து, தோலை நீக்கிவிட்டு பருப்பை எடுத்து தூளாக்கி, தினமும் ஒரு சிட்டிகை வாயில் போட்டுக் கொண்டு, தண்ணீர் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்படும்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது, தேங்காய்த் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு விரைவில் வெந்துவிடும். வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.

தக்காளி சரியாகப் பழுக்காவிட்டால், ஒரு பாலித்தீன் பையில் போட்டு கட்டி வைத்தால் மறுநாள் நன்றாகப் பழுத்துவிடும்.

Advertisement

வெந்தயக் கீரையில் வைட்டமின் 'ஏ' சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ளன. அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிட்டால், ரத்தத்தைப் பெருக்கும். எலும்புகள் வலுப்பெறும்.

ஆலமர இலைகளைச் சூடுபடுத்தி, அதன் மேல் எள் எண்ணெய் கலந்து வீக்கத்தின் மீது கட்டினால் வீக்கம், காயம், கொப்புளங்கள் குணமாகிவிடும்.

ஆலம்பழத்தை நிழலில் உலர்த்திச் சாப்பிட்டால், ஞாபகச் சக்தி பெருகும்.

பச்சை மிளகாயை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து காற்று புகாமல் இறுக்கி மூடிவிட்டால், பச்சைமிளகாய் ஒரு வாரம் வரை வாடாமல், வதங்காமல் இருக்கும்.

சிறிதளவு உப்பை மெழுகுவர்த்தி மீது நன்றாகத் தேய்த்துவிட்டு பின்னர் எடுத்து பற்றவைத்தால், வெளிச்சமும் கூடும். விரைவில் உருகாமலும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.