FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

பறவையைத் தொடர்வோம்...

* ஊதாப்பிட்டு தேன்சிட்டு    இது சிட்டுக்குருவியை விட சிறியது. மலர்களில் உள்ள தேனைக் குடித்து வாழும் பறவை. இது தேனைக் குடிக்கும் அழகே தனி. இதன் அலகு பூக்களுக்குள் செலுத்துவதற்கு ஏதுவாக வில் போல் வளைந்த

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:38 am IST
பகிர்:

* ஊதாப்பிட்டு தேன்சிட்டு

 இது சிட்டுக்குருவியை விட சிறியது. மலர்களில் உள்ள தேனைக் குடித்து வாழும் பறவை. இது தேனைக் குடிக்கும் அழகே தனி. இதன் அலகு பூக்களுக்குள் செலுத்துவதற்கு ஏதுவாக வில் போல் வளைந்திருக்கும். அலகிலிருந்து மிக மெல்லிய உறிஞ்சி குழல் போல் பூக்களுக்குள் செலுத்தி பூக்களில் உள்ள தேனைக் குடிக்கும். பூவின் அருகில் தனது சின்னஞ்சிறு சிறகை வேகமாக அடித்துக்கொண்டே பூவிலிருந்து தேனை நொடிப்பொழுதில் உறிஞ்சிவிடும். கருநீலத்தில் தலைப்பகுதியில் மயில் வண்ணத்தில் மின்னும் கழுத்திலிருந்து அடிப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக காணப்படும். இதன் ஒலி நம்பமுடியாத அளவிற்கு சத்தமாகவும் இனிமையாகவும் இருக்கும்.

 இது கூடு அமைக்கும் விதம் அலாதியானது. காய்ந்த இலை, வேர்கள் சிலந்தியின் வலைத் துண்டுகள் என பல்வேறு பொருள்களை சேகரித்து அதன் அளவுக்கேற்றாற் போல் இரண்டு இலைகளை இணைத்து கட்டும். பெண்களும் அறிவாற்றல் பெற்றவர்கள் என்பதற்கு இந்த பறவையை உதராணமாகக் கூறலாம். இதன் கூட்டை பெண் பறவை கட்டுவதுதான் அதற்குக் காரணம்.

Advertisement

Advertisement

சின்னான் குருவி

 இது கொண்டைக் குருவி, கொண்டலாத்தி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தலைப்பகுதி கருப்பு

 நிறத்திலும் உடல் பகுதி பழுப்பு நிறத்திலும் சிறகுகளின் ஓரங்களில் வெள்ளை நிறமும் வாலின் அடிப்பகுதியில் சிவப்பு நிறமும் காணப்படும். இந்தியா முழுவதிலும் காணப்படும் பறவை இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments