குறள் பாட்டு
கூத்தாடுகின்ற இடங்களில்கூட்டம் வந்து சேர்ந்திடும்
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:05 AM
நிலையாமை
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று
- திருக்குறள்
கூத்தாடுகின்ற இடங்களில்
கூட்டம் வந்து சேர்ந்திடும்
கூத்து முடிந்த பின்னாலே
கூட்டம் கலைந்து சென்றிடும்
வந்து சேர்ந்ததும் தெரியாது
கலைந்து சென்றதும் தெரியாது!
செல்வம் வருவதும் போவதும்
கூடுதல், கலைதல் போன்றதே.