குறள் பாட்டு
உழவுத் தொழிலைச் செய்பவர்கள்உணவை உற்பத்தி செய்வார்கள்
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:20 AM
உழவு
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
திருக்குறள்
உழவுத் தொழிலைச் செய்பவர்கள்
உணவை உற்பத்தி செய்வார்கள்
எந்தத் தொழிலைச் செய்தாலும்
எல்லோர்க்கும் உணவு தேவையே
எல்லோர்க்கும் உணவு வழங்கியே
எல்லோரையும் தாங்கி உழைத்திடும்
உழவர் அச்சாணி போன்றவர்
உலகுக்கு முதன்மை ஆனவர்.