முகப்பு
சிறுவர்மணி

வீச வேண்டும் காற்று!

வந்து வந்து வீசவேண்டும் வாசம் உள்ள தென்றலே!சிந்து சிந்தும் குயிலின் பாட்டைத் 

Updated On : 28 மார்ச் 2020, 7:16 pm IST
பகிர்:


வந்து வந்து வீசவேண்டும் 
வாசம் உள்ள தென்றலே!
சிந்து சிந்தும் குயிலின் பாட்டைத் 
தந்து செவியில் ஊட்டுக!

சாமரம் நீ வீச வேண்டும் 
பூமரங்கள் மூலமாய்!
மா மரங்கள் கனியும் இள
வேனில் தந்த தென்றலே!

குட்டித் தம்பி விட்ட பட்டம் 
எட்டி எட்டிப் பறக்கவே
தொட்டு நீயும் உயரே ஏற்ற 
தோழன் போல உதவு நீ!

Advertisement

Advertisement

இலைகள் யாவும் குலுங்க வைத்து 
இசையை வழங்கு தென்றலே!
அலைகள் யாவும் ஊஞ்சலாக்கி 
ஓடம் ஆட வருக நீ!

வளைவில் லாத காட்டு மூங்கில் 
துளையில் நுழையும் பொழுதிலே 
விளையும் நாதம் கேட்பதற்கு 
வீச வேண்டும் தென்றலே!

அங்கும் இங்கும் எங்கும் தங்கி 
ஆண்டவன் போல் வாழ்கின்றாய்!
எங்கள் மூச்சில் கலந்ததாலே
இயக்கும் மகா சக்தி நீ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments