விழுது
ஆல மரத்தில் பிறப்பதனால் ஆலம் விழுது என்பதுவாம்!ஆலம் விழுது மரத்தினிலே
ஆல மரத்தில் பிறப்பதனால்
ஆலம் விழுது என்பதுவாம்!
ஆலம் விழுது மரத்தினிலே
அழகாய்ப் பிறந்தே வளர்ந்திடுமாம்!
வளர்ந்த விழுதும் பூமியிலே
வலுவாய் ஊன்றி வேரிடுமாம்!
தளர்ந்து போன தாய்மரத்தைத்
தாங்கிப் பிடித்தே நின்றிடுமாம்!
அருகில் இருந்தே தாய்மரத்தை
ஆலம் விழுது காப்பதுபோல்
அருகில் வைத்தே பெற்றோரை
அன்பாய்க் காக்கணும் பிள்ளைகளே!
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.