விழுது
ஆல மரத்தில் பிறப்பதனால் ஆலம் விழுது என்பதுவாம்!ஆலம் விழுது மரத்தினிலே
ஆல மரத்தில் பிறப்பதனால்
ஆலம் விழுது என்பதுவாம்!
ஆலம் விழுது மரத்தினிலே
அழகாய்ப் பிறந்தே வளர்ந்திடுமாம்!
வளர்ந்த விழுதும் பூமியிலே
வலுவாய் ஊன்றி வேரிடுமாம்!
தளர்ந்து போன தாய்மரத்தைத்
தாங்கிப் பிடித்தே நின்றிடுமாம்!
அருகில் இருந்தே தாய்மரத்தை
ஆலம் விழுது காப்பதுபோல்
அருகில் வைத்தே பெற்றோரை
அன்பாய்க் காக்கணும் பிள்ளைகளே!