வாய்மை: குறள் பாட்டு
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.
அறத்துப்பால் - அதிகாரம் 30 - பாடல் 8
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
உடலைச் சுத்தம் செய்திட
நீரில் குளிக்க வேண்டுமே
மனத்தை சுத்தம் செய்திட
வாய்மை காக்க வேண்டுமே!
மாசில்லாத மனத்திலே
நல்ல சொற்கள் தோன்றிடும்
தூய்மையான நெஞ்சினை
வாய்மை நன்கு விளக்கிடும்.
Advertisement
Advertisement