துறவு
அறத்துப்பால் - அதிகாரம் 35 - பாடல் 8
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
அரைகுறையான விரதங்கள்
அரைகுறையான நோன்புகள்
கிழமை மாத விரதங்கள்
முழுமையில்லாத தன்மையே
பற்றில்லாத பக்குவம்
முழுமையான துறவறம்
ஆசை வலையில் விழுந்துவிட்டால்
இரண்டும் கெட்டான் நிலைமைதான்.