வகுப்பறை அலப்பறை...
'ஏன்டா? ஜோதியைத் தூக்கிட்டு ஓடுறே..?''
'ஏன்டா? ஜோதியைத் தூக்கிட்டு ஓடுறே..?''
'விளையாட்டுப் போட்டியிலே ஜோதியைத் தூக்கிட்டு ஓட சொன்னாங்க.. அதான்..?''
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
Advertisement
Advertisement
'எல்லா பாடத்திலேயேயும் கம்மியா மார்க் .. முன்னாடி உட்கார்ற பையன் பேப்பரை பார்த்து எழுத வேண்டியதுதானே..?''
'எனக்கு கிட்டப் பார்வை இருக்கே.. மம்மி...'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'டீச்சர் அடிச்சாங்களா.. ஏன்டா.. தப்பா சொன்னியா?''
'அவங்க சொன்னது தப்புன்னு சொன்னேன்...''
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'நான் வகுப்பு எடுக்கறது ரொம்பவே பிடிக்கிருக்கா...? ஏன்டா..?''
'உடனே தூக்கம் வருதே சார்...''
-எம்.சுப்பையா, கோவை.
'ராமு... இரவும் பகலும் மாறிமாறி வர்ற என்ன காரணமுன்னு சொல்லு...?''
'தொடர்ந்து பகலாகவே இருந்தால் சூரியன் சீக்கிரமே எரிஞ்சி சாம்பலாயிடும் சார்.. அதான்..''
-அ.செந்தில்குமார், சூலூர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.