தெரிஞ்சுக்கோங்கோ...
தீர்மானத்துக்குப் பின்னர் தடுமாற்றம் கூடாது. தடுமாற்றம் இருப்பின் தீர்மானித்தல் கூடாது.
தீர்மானத்துக்குப் பின்னர் தடுமாற்றம் கூடாது.
தடுமாற்றம் இருப்பின் தீர்மானித்தல் கூடாது.
-எம்.ரவீந்திரன், திருமருகல்.
Advertisement
எண்ணங்களின் எழுச்சி வாழ்க்கை தரும் மகிழ்ச்சி.
மென்மை போக்கே மேன்மை காக்கும்.
தடம் பார்த்து நடப்பவர் மனிதர். வெற்றி வடம் பிடித்து நடப்பவர் மனிதர்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
நல்ல செயல்கள் செய்ய பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். -த.பாலசுப்பிரமணியன், கோவை-4.
சந்தோஷமாக இருக்கும்போது இசை பிடிக்கிறது. துக்கமாக இருக்கும்போது பாடலின் வரிகள் புரிகிறது.
பிரச்னைகளை சவால்களாக ஏற்றால் துணிவு தானே வரும். -கே.அனந்தநாராயணன், மருங்கூர்.
துணிவு உங்களை உழைப்பால் உயர வைக்கும். பணிவு உங்களைப் பிறர் மனதில் உயர வைக்கும். -ரமணன் ஏகாம்பரம், ராசிபுரம்.
எதிரியின் பலம் உன் பலவீனத்தில் இருக்கிறது.
தோல்வி என்பது பெருங்காயம்போல தனியாகச் சாப்பிட்டால் கசக்கும். வெற்றி என்றும் சாம்பாரில் கரைந்துவிட்டால் மணக்கும். -நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
வெற்றி பெறும்போது அவன் என் நண்பன் எனப் பெருமை கொள். தோல்வி அடையும்போது நான் உன் நண்பன் என அவன் அருகில் நில்.
-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.