முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மறைந்து போன கிராமிய விளையாட்டுகள்: தென்னு கம்பு

களைஞர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு இது. முதலில் பூவா, தலையா போட்டுப் பார்ப்பார்கள். அதில் தோற்றவர் குறிப்பிட்ட இடத்தில் தன் உயரமுள்ள பெருவிரல் தடிமனுள்ள கம்பைக் கீழே போட வேண்டும். 

Updated On : 21 ஜனவரி, 2018 at 12:15 PM
பகிர்:

களைஞர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு இது. முதலில் பூவா, தலையா போட்டுப் பார்ப்பார்கள். அதில் தோற்றவர் குறிப்பிட்ட இடத்தில் தன் உயரமுள்ள பெருவிரல் தடிமனுள்ள கம்பைக் கீழே போட வேண்டும். 

மற்ற கம்புக்காரர்கள் அரை கம்புக்காரர்கள் தங்களைத் தொட்டு விடாமல் அந்தக் கம்பை தென்னி வீச வேண்டும். கம்பை யாரும் தென்னாத அளவுக்கு பாதுகாக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கம்புக்காரரின் பொறுப்பு. அருகில் வருபவரைத் தொட முயலும் போது அடுத்தவர் அந்தக் கம்பை வீசி விடுவார்.

இப்போது தென்னி வீசியவனைத் தொட ஓடுவான். மற்றவன் கம்பை தென்ன வருவான். இப்படியே ஒருவரை அலைக்கழிப்பது தான் விளையாட்டு. தொட வரும்போது வேகமாக ஓட வேண்டியிருக்கும்.

Advertisement

இப்படியே கம்பைத் தென்னிக் கொண்டு ஊருக்கு வெளியே கூட ஓடி விடுவார்கள். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த விளையாட்டு இது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.