ஞாயிறு கொண்டாட்டம்

வசனத்தில் புது முயற்சி

விஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கேமரா எரர்'. 

DIN

விஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கேமரா எரர்'. 

சுதிர், பிரபாகரன், ஹரிணி, சிம்ரன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அகரன். உண்மைச் சம்பவங்களை படமாக எடுக்க படக்குழுவினர் ஒரு மலை கிராமத்திற்கு  செல்கின்றனர். தினமும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆனால் ஒவ்வொரு நாளும் படக்குழுவினரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சந்தேகத்துடன் கவனிக்கையில் அங்கே இறந்துபோனவர்களின் ஆவிகள் இவர்களுடன் கலந்துவிடுகின்றனர்.  பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் படக்குழுவினர் ஆவிகளிடம் இருந்து தப்பித்தார்களா? படப்பிடிப்பை முடித்தார்களா? என்று பரபரப்பாக சொல்லுவதே களம். படப்பிடிப்பில் இயக்குநர் காட்சியை விளக்கிவிட்டு ஆக்ஷன் என்றதும் அக்காட்சியில் நடிப்பவர்களே யோசித்து வைத்த வசனத்தை சொல்லி நடிக்க வேண்டும். இப்படித்தான் படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளனர் இயக்குநர் அகரன் இப்படத்தில் வெற்றிக்கரமாக முடித்துள்ளார்.  ஒளிப்பதிவு -  பாலாஜி எஸ்.பி. இசை - ஷரவன் கலை.  தயாரிப்பு - துபாய் மிஸ்ரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT