FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா? "கவிதை'  வடசொல்லே! 21.11.10 அன்று தமிழ்மணி -  இலக்கிய விவாதத்தில் வெளியான, "கவிதை தமிழ்ச் சொல்லே!' என்று கட்டுர

Updated On : 20 செப்டம்பர் 2012, 9:20 pm IST
பகிர்:

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?



"கவிதை'  வடசொல்லே!

21.11.10 அன்று தமிழ்மணி -  இலக்கிய விவாதத்தில் வெளியான, "கவிதை தமிழ்ச் சொல்லே!' என்று கட்டுரையாளர், ""கம்பன், "சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி' என்று பாடியதால் கவி, கவிதை என்ற சொற்கள் செம்மொழிப் (தமிழ்) பதங்கள் என்கிறார். இது மிக மிகத் தவறு. இவ்வாறு கூறினால், திருவள்ளுவர் பயன்படுத்தியதால், "ஆதி' (குறள்-1), "பாக்கியம்' (குறள்-1141) போன்ற வடசொற்களையும் தமிழ் என்று கூறிவிடலாம். "கவி' செம்மொழிச் சொல்லாயின் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கும்.

Advertisement

Advertisement

கட்டுரையாளர் காட்டும் கம்பனுடைய அதே பாடலில், சவி (ஒளி) என்ற வட சொல்லும் வருகிறது. இது சவிதா, சவிதை என்று திரிந்து வழங்கப்படுவது போலவே, கவி என்ற வட சொல்லும் கவிதா, கவிதை என்று திரிந்து வழங்கப்படுகிறது. சீதா, நர்மதா என்ற வடசொற்கள், சீதை, நர்மதை என்று தமிழில் வழங்கப்படுவதைக் காணலாம்.

மேலும், "கவ்' என்பதற்கு வீண் ஆராய்ச்சி செய்து "ஈர்ப்பது' என்று பொருள் கூறியுள்ளார். கவ், கெü - வாயினால் பற்றுதல், வவ், வெü - கையினால் பற்றுதல் என்பதே சரியான பொருள். ஆகவே, "கவிதை' என்பது வடசொல்லே!

இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

"கல்லாடம்' என்ற நூலை இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்றும், 13-ஆம் நூற்றாண்டு என்றும், 16-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதி என்றும், கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்றும் தமிழறிஞர்களால் கூறப்படுகிறது. கல்லாடரின் காலம் எது? கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்தது உண்மையா?

-ஏகம்பர் நாயகி,  திருவிடைமருதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments