சொல் அறிவோம்
சொல் அறிவோம்
இரத்தம் - அரத்தம்
தமிழ் இலக்கண முறைப்படி மொழிக்கு முதலில் "ர' வராது. எனவே, ரத்தம் என்பதை நாம் அனைவரும் இரத்தம் என்றே எழுதி வருகிறோம். இப்படி எழுதுவது தவறானது. அரத்தம் என்ற சொல்லே சரியானது.
*சிவந்த மேனி உடைய சிவன் அரன் எனப்பட்டான்.
Advertisement
Advertisement
*சிவந்த நிறமுடைய அழுத்த மெழுகு
அரக்கு எனப்பட்டது.
* சிவந்த நிறமுடைய தரைவாழ் சிறிய உயிரினம் அரணை எனப்பட்டது.
* சிவந்த நிறமுடைய பூ அரளி எனப்பட்டது.
* சிவந்த நிறமுடைய பூ அரத்தம்பூ என்றும், அப்பூவே செம்பரத்தம்பூ எனவும் கூறப்பட்டது.
* வெளிர் சிவப்பு நிறமுடைய தூள் அரப்பு எனப்பட்டது.
ஆக, இவை போன்றே சிவந்த நிறம் உடைய குருதி அரத்தம் எனப்படும். அரத்தம் என்று எழுதுவதே சரியானது.
கோழிக் குஞ்சு - கோழிப் பார்ப்பு
கோழிக் குட்டியும் கிடையாது; கோழிக் குஞ்சும் கிடையாது. அதன் பெயர்
கோழிப் பார்ப்பு எனப்படும். "பார்ப்பு' என்பதற்கு "இரட்டைப் பிறப்பு' என்று பொருள். கோழி முட்டை இடுவது முதல் பிறப்பு; அந்த முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பது இரண்டாவது பிறப்பு. எனவே, அது கோழிப் பார்ப்பு ஆயிற்று.
பார்ப்பனர்கள் என்ற ஒரு வகுப்பினர் உள்ளனர். அவர்கள் தாயின் வயிற்றில் பிறப்பது முதல் பிறப்பு. அடுத்து அவர்கள் பூணூல் கலியாணம் செய்து கொள்வது என்பது அவர்களின் இரண்டாவது பிறப்பு என்பர். எனவே, அவர்கள் இரட்டைப் பிறப்பாளர் என்ற பொருளில் "பார்ப்பனர்கள்' எனப்பட்டனர்.
எனவே, கோழிப் பார்ப்பு என்பதே சரியான சொற்றொடராகும்.
-வய்.மு.கும்பலிங்கன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.