தமிழ்மணி

பிறப்பும் இறப்பும்

எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டுத், தனக்கு வேறொரு தாயை நாடி அடுத்த பிறவி எடுப்பதற்காகச் சென்று விட்டாள்.

தினமணி செய்திச் சேவை

எனக்குத் தாய்ஆகியாள் என்னையீங்கு இட்டுத்,

தனக்குத்தாய் நாடியே சென்றாள்;தனக்குத்தாய்

ஆகி யவளும் அதுவானால், தாய்த்தாய்க் கொண்டு

ஏகும் அளித்திவ் வுலகு.

(பாடல் 15 அதிகாரம் இளமை நிலையாமை)

எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டுத், தனக்கு வேறொரு தாயை நாடி அடுத்த பிறவி எடுப்பதற்காகச் சென்று விட்டாள். அவளுக்குத் தாயாக இருந்தவளும் அப்படியே அவளை விட்டுவிட்டுப் போய் விட்டாள். இதுவே இவ்வுலகின் இயல்பானால், தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டே சென்று கொண்டிருக்கும் படியான ஏழைமையை உடையதுதான் இவ்வுலகமாகும் போலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!

ஓடிடியிலும் வரவேற்பைப் பெறும் சையாரா!

மந்திரக்காரி... அனிகா சுரேந்திரன்!

சென்னையில் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு!

பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் வலுக்கும் கண்டனம்!

SCROLL FOR NEXT