பிறப்பும் இறப்பும்
எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டுத், தனக்கு வேறொரு தாயை நாடி அடுத்த பிறவி எடுப்பதற்காகச் சென்று விட்டாள்.
எனக்குத் தாய்ஆகியாள் என்னையீங்கு இட்டுத்,
தனக்குத்தாய் நாடியே சென்றாள்;தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால், தாய்த்தாய்க் கொண்டு
Advertisement
Advertisement
ஏகும் அளித்திவ் வுலகு.
(பாடல் 15 அதிகாரம் இளமை நிலையாமை)
எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டுத், தனக்கு வேறொரு தாயை நாடி அடுத்த பிறவி எடுப்பதற்காகச் சென்று விட்டாள். அவளுக்குத் தாயாக இருந்தவளும் அப்படியே அவளை விட்டுவிட்டுப் போய் விட்டாள். இதுவே இவ்வுலகின் இயல்பானால், தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டே சென்று கொண்டிருக்கும் படியான ஏழைமையை உடையதுதான் இவ்வுலகமாகும் போலும்.