பிறப்பும் இறப்பும்
எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டுத், தனக்கு வேறொரு தாயை நாடி அடுத்த பிறவி எடுப்பதற்காகச் சென்று விட்டாள்.
எனக்குத் தாய்ஆகியாள் என்னையீங்கு இட்டுத்,
தனக்குத்தாய் நாடியே சென்றாள்;தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால், தாய்த்தாய்க் கொண்டு
Advertisement
Advertisement
ஏகும் அளித்திவ் வுலகு.
(பாடல் 15 அதிகாரம் இளமை நிலையாமை)
எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இங்கே விட்டு விட்டுத், தனக்கு வேறொரு தாயை நாடி அடுத்த பிறவி எடுப்பதற்காகச் சென்று விட்டாள். அவளுக்குத் தாயாக இருந்தவளும் அப்படியே அவளை விட்டுவிட்டுப் போய் விட்டாள். இதுவே இவ்வுலகின் இயல்பானால், தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டே சென்று கொண்டிருக்கும் படியான ஏழைமையை உடையதுதான் இவ்வுலகமாகும் போலும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.