முகப்பு
தமிழ்மணி

ஆராயாமல் எழும் நெஞ்சம்

இளமையாகிய சிறந்த பருவமும் வீணே கழிந்து விட்டது. இப்பொழுதே நோய்நொடியொடு கிழத்தனமும் வந்து நம்மைச் சேர்ந்து விடும்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:46 PM
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:45 PM

கொன்னே கழிந்தன்று இளமையும்! இன்னே

பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவொன்றி

என்னொடு சூழாது, எழுநெஞ்சே! போதியோ,

Advertisement

நன்னெறி சேர, நமக்கு?

( பாடல் 55 அதிகாரம்: துறவு )

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:45 PM

இளமையாகிய சிறந்த பருவமும் வீணே கழிந்து விட்டது. இப்பொழுதே நோய்நொடியொடு கிழத்தனமும் வந்து நம்மைச் சேர்ந்து விடும். ஆதலால், துணிவினைப் பொருந்தி, என்னொடும் ஆராயாமல் எழுகின்ற நெஞ்சமே! நமக்கு நல்ல வழியானது கிடைப்பதற்கு இப்போதாவது முயற்சி செய்யப்போகின்றாயோ, அல்லவோ? டஇளமையிலே, அதன் வழியாக நின்று உலக இன்பங்களிலே உழன்ற ஒருவன், நன்னெறியை நாடியவனாக, முதலிலே தன் மனத்தைத் தன் வழிப்படுத்த இப்படிச் சொல்கிறான்' என்று கொள்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.