ஆற்ற வேண்டாமல் அடங்கும் சினம்!
கீழ்மக்களுடைய சினமானது நெடுங்காலம் ஓடினாலும் கூட அதற்கு ஓர் அழிவு காலம் இல்லாமல் மேன்மேலும் வளர்ந்து கொண்டே போகும்.
நெடுங்காலம் ஓடினும், நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும்;} அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே,
Advertisement
Advertisement
சீர்கொண்ட சான்றோர் சினம்.
(பாடல் 68 அதிகாரம்: சினம் இன்மை)
கீழ்மக்களுடைய சினமானது நெடுங்காலம் ஓடினாலும் கூட அதற்கு ஓர் அழிவு காலம் இல்லாமல் மேன்மேலும் வளர்ந்து கொண்டே போகும். காய்ச்சும் பொழுது நீரானது கொண்ட வெப்பத்தைப் போலச் சீர்மையான உள்ளத்தைக் கொண்ட சான்றோர்களின் சினமானது, பிறரால் ஆற்ற வேண்டாமல் தானே சிறிது நேரத்தில் வெப்பம் அடங்கி ஆறிப்போய் விடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.