யார் மேலோர்?
துன்பங்களே நாளும் நாளும் வந்து கொண்டிருப்பதைக் கண்டும், இல்வாழ்வினைத் துறந்துவிடுதலைப் பற்றி நினையாதவராக, அந்த இல்வாழ்விற் கிடைக்கும் சிற்றின்ப சுகத்தையே அறிவற்றவர்கள் பெரிதும் விரும்புவார்கள்.
துன்பமே மீதூரக் கண்டும், துறவுள்ளார்
இன்பமே காமுறுவர், ஏழையார்;-இன்பம்
இசைதோறும், மற்றதன் இன்னாமை நோக்கிப்
Advertisement
Advertisement
பசைதல் பரியாதாம், மேல்.
(பாடல் 60 அதிகாரம்: துறவு)
துன்பங்களே நாளும் நாளும் வந்து கொண்டிருப்பதைக் கண்டும், இல்வாழ்வினைத் துறந்துவிடுதலைப் பற்றி நினையாதவராக, அந்த இல்வாழ்விற் கிடைக்கும் சிற்றின்ப சுகத்தையே அறிவற்றவர்கள் பெரிதும் விரும்புவார்கள். மேலானவரோ, இன்பம் வந்து வாய்க்கும் பொழுதெல்லாம், அதனால் பின்வரும் துன்பத்தையே நினைந்து, இன்பத்தின்பால் ஆசை கொள்வதை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள்.