முகப்பு
தமிழ்மணி

நாலடியார்

சினம் கொள்ள வேண்டாம்

Updated On : 31 மே 2026, 2:32 pm IST
பகிர்:

சினம் கொள்ள வேண்டாம்

மதித்துஇறப் பாரும் இறக்க! மதியார்,

மிதித்துஇறப் பாரும் இறக்க!- மிதித்தேறி,

Advertisement

Advertisement

ஈயுந் தலைமேல் இருத்தலால், அஃதறிவார்

காயும் கதமின்மை நன்மை.

(பாடல் 61 அதிகாரம்: சினம் இன்மை)

தம்மை மேன்மைப்படுத்திச் செல்பவர்களும் செல்வார்களாக; தம்மை மதியாமல் கீழ்மைப்படுத்திச் செல்பவர்களும் செல்வார்களாக; மிகவும் இழிவான ஈயுங்கூட தம் தலைமேல் மதித்து ஏறிவந்து இருப்பதனால், அதனை அறிந்தவர்கள், பிறரையும் தம்மையும் சுட்டுப் பொசுக்கும் சினத்தைக் கொள்ளாதவராக இருப்பதே, மிகவும் நன்மை தருவதாகும். 'உயர்ந்தோர் எவரையும் மதிப்பார்கள்; இழிந்தோர் சான்றோரையும் அவமதிப்பார்கள்; அவமதிப்போர் மீது சினங்கொள்ளல் கூடாது.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.