FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

நாலடியார்

சினம் கொள்ள வேண்டாம்

Updated On : 31 மே 2026, 2:32 pm IST
பகிர்:

சினம் கொள்ள வேண்டாம்

மதித்துஇறப் பாரும் இறக்க! மதியார்,

மிதித்துஇறப் பாரும் இறக்க!- மிதித்தேறி,

Advertisement

Advertisement

ஈயுந் தலைமேல் இருத்தலால், அஃதறிவார்

காயும் கதமின்மை நன்மை.

(பாடல் 61 அதிகாரம்: சினம் இன்மை)

தம்மை மேன்மைப்படுத்திச் செல்பவர்களும் செல்வார்களாக; தம்மை மதியாமல் கீழ்மைப்படுத்திச் செல்பவர்களும் செல்வார்களாக; மிகவும் இழிவான ஈயுங்கூட தம் தலைமேல் மதித்து ஏறிவந்து இருப்பதனால், அதனை அறிந்தவர்கள், பிறரையும் தம்மையும் சுட்டுப் பொசுக்கும் சினத்தைக் கொள்ளாதவராக இருப்பதே, மிகவும் நன்மை தருவதாகும். 'உயர்ந்தோர் எவரையும் மதிப்பார்கள்; இழிந்தோர் சான்றோரையும் அவமதிப்பார்கள்; அவமதிப்போர் மீது சினங்கொள்ளல் கூடாது.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments