நாலடியார்
சினம் கொள்ள வேண்டாம்
சினம் கொள்ள வேண்டாம்
மதித்துஇறப் பாரும் இறக்க! மதியார்,
மிதித்துஇறப் பாரும் இறக்க!- மிதித்தேறி,
Advertisement
Advertisement
ஈயுந் தலைமேல் இருத்தலால், அஃதறிவார்
காயும் கதமின்மை நன்மை.
(பாடல் 61 அதிகாரம்: சினம் இன்மை)
தம்மை மேன்மைப்படுத்திச் செல்பவர்களும் செல்வார்களாக; தம்மை மதியாமல் கீழ்மைப்படுத்திச் செல்பவர்களும் செல்வார்களாக; மிகவும் இழிவான ஈயுங்கூட தம் தலைமேல் மதித்து ஏறிவந்து இருப்பதனால், அதனை அறிந்தவர்கள், பிறரையும் தம்மையும் சுட்டுப் பொசுக்கும் சினத்தைக் கொள்ளாதவராக இருப்பதே, மிகவும் நன்மை தருவதாகும். 'உயர்ந்தோர் எவரையும் மதிப்பார்கள்; இழிந்தோர் சான்றோரையும் அவமதிப்பார்கள்; அவமதிப்போர் மீது சினங்கொள்ளல் கூடாது.'