FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தானின் சுதந்தர தினம்: தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கொடியேற்றிக் கொண்டாட்டம்

பாகிஸ்தானின் 70-ஆவது சுதந்தர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்காசியாவிலேயே மிக உயரமான கொடியை ஏற்றியுள்ளது பாகிஸ்தான்.

Updated On : 14 ஆகஸ்ட் 2017, 1:21 pm IST
பகிர்:


லாகூர்: பாகிஸ்தானின் 70-ஆவது சுதந்தர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்காசியாவிலேயே மிக உயரமான கொடியை ஏற்றியுள்ளது பாகிஸ்தான்.

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா அருகே நள்ளிரவு 12 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி, இந்த கொடியை ஏற்றி வைத்தார்.

பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட இந்த கொடி 400 அடி உயரக்கம்பத்தில் பறக்கப்பட்டது. அது 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்டது. 

Advertisement

Advertisement

400 அடி உயரத்தில் ஏற்றப்பட்டிருக்கும் பாகிஸ்தான் தேசியக் கொடி தெற்காசிய அளவில் மிகப்பெரிய தேசியக் கொடி என்ற பெருமையையும், உலக அளவில் எட்டாவது மிகப்பெரிய கொடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தளபதி பஜ்வா, நாட்டின் சுதந்தரத்துக்காகப் போராடி உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை மறக்கவே முடியாது. பாகிஸ்தானில் இருக்கும் ஒரு பயங்கரவாதியைக் கூட நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். நாட்டின் எதிரிக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான், அவர்கள் கிழக்கில் இருக்கிறார்களோ, மேற்கில் இருக்கிறார்களோ, ஆனால், உங்கள் துப்பாக்கித் தோட்டாக்கள் வேண்டுமானால் தீர்ந்துபோகும், எங்கள் வீரர்களின் தோள்கள் அல்ல என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments