FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்வு 

பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 17 ஆகஸ்ட் 2018, 6:34 pm IST
பகிர்:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி 116 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து மொத்தமுள்ள 342 இடங்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. எனவே முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் (65), பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், ஆகஸ்டு 18-ஆம் தேதி அன்று அவர் பிரதமராக பதவியேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் மூத்த தலைவர் ஃபைஸல் ஜாவித் கான் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

அதன்படி பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments