பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்வு
பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி 116 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து மொத்தமுள்ள 342 இடங்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. எனவே முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் (65), பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்டு 18-ஆம் தேதி அன்று அவர் பிரதமராக பதவியேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் மூத்த தலைவர் ஃபைஸல் ஜாவித் கான் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
அதன்படி பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.