முகப்பு
உலகம்

இந்துக்களை கொன்றவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் -வங்கதேச பிரதமர்

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு பலியான 4 இந்துக்களின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருக்கிறார்.

Updated On : 15 அக்டோபர் 2021, 1:08 pm IST
இந்துக்களை கொன்றவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் -வங்கதேச பிரதமர்
பகிர்:

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு பலியான 4 இந்துக்களின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருக்கிறார்.

வங்கதேசத்தில் நேற்று(அக்.14) நடைபெற்ற துர்கா பூஜையின் போது பல்வேறு இந்து கோயில்களில் ஏற்பட்ட வன்முறைக் கலவரத்தில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்துக்கள் அதிகம் இருக்கும் 22 மாவட்டங்களில் துணை ராணுவப்படையினரை நிறுத்தியும் இந்தக் கலவரம் ஏற்பட்டதால் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement

இதனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனங்கள் எழுந்ததால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா  , ‘ துர்கா பூஜையின் போது கலவரத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. விரைவில் தொழில்நுட்ப உதவியுடன்  பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்’என்று தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.