100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை
சீனாவில் இதுவரை 100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் இதுவரை 100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பரவலுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டப்பட்டுவருகிறது.
இதையும் படிக்க | தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுகாதாரப்பணியாளர்கள் பணியிடைநீக்கம்: பிரான்ஸ்
Advertisement
Advertisement
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இதுவரை 70 சதவிகிதத்தினருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய மருத்துவ கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் மீ ஃபெங் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் தடுப்பூசி செலுத்தும் பணியில் இது ஒரு புதிய மைல்கல் என அவர் குறிப்பிட்டார்.
உலகின் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடு எனும் பெருமையை சீனா பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பகுதியை சீனா செலுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.