முகப்பு
உலகம்

பட்டினி இஸ்ரேலின் ஆயுதமா? நிவாரண உதவிகளில் நீடிக்கும் சிக்கல்!

காஸாவில் நுழைந்த நிவாரண டிரக்குகள்: இஸ்ரேலின் நீடிக்கும் நிவாரண உதவி சோதனை

Updated On : 13 மார்ச் 2024, 4:18 pm IST
இலவச உணவுக்காகக் காத்திருக்கும் பாலஸ்தீன மக்கள் - AP
பகிர்:

நிவாரண பொருள்கள் ஏற்றப்பட்ட 6 டிரக்குகள் காஸாவுக்குள் முதன்முறையாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் நுழைவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் பொருள்களை ஏற்றிவரும் 6 டிரக்குகள் எல்லை வேலியைத் தாண்டி காஸாவுக்குள் நுழைந்தன.

சோதனை ஓட்டமாக இந்த வழி கருதப்படுவதாகவும் இஸ்ரேல் இதன் விளைவுகளை ஆராயும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இஸ்ரேல், ஹமாஸ் இந்த நிவாரண உதவிகளுக்கு கட்டளையிடுவதாக கூறியது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் காஸா மக்களுக்கு நிவாரணம் கிடைக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காஸாவின் வடக்குப் பிராந்தியத்துக்கு உதவி கிடைக்க கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

ஓபன் ஆர்ம்ஸ் நிவாரண குழுவின் கப்பல் - AP

தெற்கு எல்லை வழியாக நுழையும் டிரக்குகள் திரளான மக்கள், இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவற்றைக் கடந்து மறுமுனைக்கு செல்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுவதாக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு தலைவர் செவ்வாய்கிழமை குற்றம் சாட்டினார்.

அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் வானில் இருந்து நிவாரண பொருள்களை பாராசூட் மூலம் வீசுதல், கடல் மார்க்கமாக அனுப்புதல் ஆகிய முறைகளைச் சோதித்து வருகின்றன. இருப்பினும், தரை வழியாக அனுப்பப்படுவதே பயனுள்ளதாக இருக்கும் என கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments