இலங்கையில் டிட்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 20.6 கோடி டாலர் அவசரகால நிதி - ஐஎம்எஃப்
டிட்வா புயலால் இலங்கையில் பேரழிவு:
டிட்வா புயலால் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் கடந்த நவ. 28-இல் கரையைக் கடந்த டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருவெள்ளம், மழை பாதிப்புகளால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 643 பேர் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement
கடந்த 20 ஆண்டு காலத்தில் இலங்கை சந்தித்திடாத இயற்கைப் பேரழிவாக டிட்வாவின் தாக்கம் இலங்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. இதையடுத்து, இலங்கையின் பொருளாதாரம் சீர்குலையாமல் பாதுகாக்கும் நடவடிக்கையாக உடனடி நிதி வழங்கல் கொள்கை மூலம் இலங்கைக்கு 20.6 கோடி டாலர் அவசரகால நிதியை விடுவிக்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Colombo: The IMF has approved an emergency funding of USD 206 million under its rapid finance instrument to help Sri Lanka address the urgent needs arising from the catastrophic Cyclone Ditwah and preserve macroeconomic stability
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.