ஜப்பானில் தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: பலர் காயம்
ஜப்பானில் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
ஜப்பானில் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
ஜப்பானில் டோக்கியோவின் மேற்கே உள்ள மிஷிமா நகரில் ரப்பர் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை கத்தியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
தாக்குதல் நடத்தியவர் தொழிற்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலைமைகள் உள்பட வேறு எந்த விவரங்களும் உடனடியாகத் தெரியவில்லை.
Several people were hospitalised after being stabbed at a factory in central Japan on Friday, media reports said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.