பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அஜர்பைஜான் அதிபர் இல்ஹெம் அலியேவ் 
உலகம்

பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையிலான முதலீடு ஒப்பந்தம் குறித்து...

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.17 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அஜர்பைஜான் தலைமையில் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், அந்நாட்டு அதிபர் இல்ஹெம் அலியேவ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கான்கெண்டி நகரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இருநாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் அஜர்பைஜானின் பொருளாதாரத் துறை அமைச்சர் மிகாயில் ஜப்பாரோவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், இந்த முதலீடு குறித்த விரிவான ஒப்பந்தம் அஜர்பைஜான் அதிபர் பாகிஸ்தான் வரும்போது கையெழுத்தாகும் என உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், அவரது பாகிஸ்தான் பயணம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த சில காலமாக பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவுகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

An investment agreement worth 2 billion US dollars has been signed between Pakistan and Azerbaijan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT