அஜர்பைஜான் விமான விபத்து: ரஷிய பாதுகாப்பு அமைப்புதான் காரணம்! - அதிபர் புதின்!
அஜர்பைஜான் விமான விபத்துக்கு ரஷிய அதிபர் புதின் பொறுப்பேற்றுள்ளது குறித்து...
அஜர்பைஜான் விமான விபத்துக்கு, ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம், என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் முதல்முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ரஷியாவின் க்ரோஸ்னி நகரத்துக்கு 67 பயணிகளுடன் புறப்பட்டது.
அப்போது, திடீரென அந்த விமானம், கசகஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, விபத்துக்குள்ளானதில் 38 பயணிகள் பலியாகினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலீவ் உடனான சந்திப்பில், விமான விபத்துக்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ரஷிய அதிபர் புதின் முதல்முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதையும் படிக்க: இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!
Russian President Vladimir Putin has for the first time taken responsibility for the Azerbaijan plane crash, blaming Russia's air defense systems.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.