ஈரான் போர்நிறுத்தம் வேண்டி கெஞ்சியது! - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பேச்சு!
ஈரான் போர்நிறுத்தம் வேண்டி கெஞ்சியது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பேச்சு...
ஈரான் அரசு போர்நிறுத்தத்திற்காக கெஞ்சியது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. மேலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வந்த நிலையில், 2 வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 8) அன்று அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளை அமெரிக்க படைகள் அழித்துள்ளன எனவும், கடுமையான அழுத்தத்தால் போர்நிறுத்தத்தை ஏற்கும் கட்டாயம் ஈரானுக்கு ஏற்பட்டதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“ஈரான் போர்நிறுத்தத்திற்காக கெஞ்சியது. இந்நாள் உலக அமைதிக்கு ஒரு முக்கிய நாள். ஆபரேஷன் எபிக் ஃபியூரி ஒரு வரலாற்று ரீதியான வெற்றி பெற்றுள்ளது. ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதுடன், பல ஆண்டுகளுக்கு அவர்கள் போரிடும் திறனை இழந்துள்ளனர். ஈரானின் 80 சதவீத அணுசக்தி தொழிற்சாலைத் தளங்கள் தாக்கப்பட்டன” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானில் 13,000-க்கும் அதிகமான இலக்குகள் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும், அந்நாட்டின் 80 சதவீத வான் பாதுகாப்பு மற்றும் 90 சதவீத கடற்படை கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
US Secretary of Defense Pete Hegseth has stated that the Iranian government begged for a ceasefire.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.