ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!
ஈரானைவிட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுரை...
அமெரிக்கா - ஈரான் இடையே இடைக்காலப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கக் கோரி அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை ஈரான் நிராகரித்தையடுத்து, ஈரானின் நாகரீகத்தையே இன்றிரவு அழைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
டிரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து, ஈரானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணிநேரத்துக்கு பாதுகாப்பான இடத்தில் தாங்குமாறும், வெளியே வர வேண்டாம் என்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
Advertisement
இதனிடையே, கடந்த 40 நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த போர், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாகவும், அமைதி ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவுரை வழங்கியுள்ளது.
இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு, பரிந்துரைக்கும் வழித்தடங்களைப் பயன்படுத்தி ஈரானிலிருந்து வெளியேறுமாறும், கலந்தாலோசிக்காமல் சர்வதேச தரைவழி எல்லையைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.