2008-க்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை!
பிரிட்டனில் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை குறித்து...
பிரிட்டனில் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடையைக் கொண்டுவரும் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், 17 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறார்கள் சிகரெட் வாங்குவதைத் தடை செய்யும் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்படி, 2009 ஆம் ஆண்டு ஜன. 1 ஆம் தேதிக்குக்குப் பிறகு பிறந்த எவரும் (தற்போது 17 வயதானவர்கள்) சிகரெட் வாங்க முடியாது. 17 வயதுக்குள்பட்டவர்கள் புகைபிடிக்கத் தொடங்காமல் தடுப்பதை முக்கிய நோக்கமாக இந்த மசோதா கொண்டுள்ளது.
Advertisement
2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைவரும் புகைப்பிடிப்பதைத் தடை செய்வதன் மூலம் 'புகையிலையற்ற தலைமுறையை' உருவாக்கும் பிரிட்டனின் இந்த மசோதாவுக்கு “புகையிலை மற்றும் வேப்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே போன்ற ஒரு சட்டத்தை முதன்முதலில் நியூசிலாந்து 2022 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.