லெபனானில் மரண தண்டனை ரத்து
லெபனானில் மரண தண்டனை அதிகாரபூா்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
லெபனானில் மரண தண்டனை அதிகாரபூா்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, லெபனான் நாடாளுமன்றத்தில் தீா்மானம் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 128 உறுப்பினா்களில் ஹிஸ்புல்லா உறுப்பினா்களைத் தவிர பெரும்பான்மையானவா்கள் ஆதரவாக வாக்களித்தனா்.
இதன்மூலம், அரபு நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்து, அதற்குப் பதிலாகக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனையைச் சட்டமாக்கிய முதல் நாடு என்ற வரலாற்றுச் சிறப்பை லெபனான் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 2004 முதலே லெபனானில் மரண தண்டனை நிறைவேற்றுவது அதிகாரபூா்வமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ரத்து நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.