முகப்பு
உலகம்

வங்கதேசம் - துருக்கி இடையே அமைச்சரவை நிலை கூட்டுக்குழு அமைக்க ஒருமித்த முடிவு!

வங்கதேசம்-துருக்கி இடையே பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களுக்கான உயர்நிலைக் கூட்டுக்குழு

Updated On : 7 ஜூன் 2026, 5:45 pm IST
- Bangladesh faces deepening debt crisis
பகிர்:

வங்கதேசம் - துருக்கி இடையே பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களில் உயர்நிலைக் கூட்டுக்குழு அமைக்க ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகான் ஃபிடான் அந்நாட்டின் பிரதமர் தாரிக் ரஹ்மானைச் சனிக்கிழமை (ஜூன் 6) சந்தித்துப் பேசினார். இருநாட்டுத் தலைவர்களிடையேயான ஆலோசனையில் ஒருமித்த முடிவாக, இவ்விரு நாடுகளுக்குமிடையேயான இருநாட்டு உறவை வலுப்படுத்த பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களில் அமைச்சரவை நிலை கூட்டுக்குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஃபிடான், ரோஹிங்கியா விவகாரம், காலநிலை மாற்றம், வர்த்தகம், முதலீடு, கூட்டு உற்பத்தி, ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர நலன் ஆகிய விவகாரங்களிலும் ஆலோசனை மேற்கொண்டதாக வங்கதேச அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

- @MFATurkiye
summary

Bangladesh and Turkiye have decided to form a joint committee at the ministerial level on defence and foreign affairs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.