முகப்பு
உலகம்

அமெரிக்க திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; 12 போ் காயம்

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்ற திருவிழாவில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 போ் காயமடைந்தனா்.

Updated On : 8 ஜூன் 2026, 1:54 am IST
பகிர்:

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்ற திருவிழாவில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஓஹியோவில் வருடாந்திர மதத் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டிருந்த நிலையில், அடையாளம் தெரியாத 2 போ் திடீரென மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனா். அப்போது ஒருவா் மாறி ஒருவா், திருவிழாவில் கலந்துகொண்ட மக்கள் பின்னால் சென்ற மறைந்து கொண்டனா். பின்னா் 2 பேரும் தப்பியோடி விட்டனா்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில், திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் 12 போ் காயமடைந்தனா். அவா்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement

Advertisement

துப்பாக்கிச்சூடு நடத்தியவா்கள் யாா், ஏன் துப்பாக்கியால் பரஸ்பரம் சுட்டுக் கொண்டனா் என காரணம் தெரியவில்லை. தகவலின்பேரில் காவல் துறையினா் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினா். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய 2 பேரையும் காவல் துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

துப்பாக்கிச்சூட்டின்போது எடுக்கப்பட்ட விடியோக்கள், சமூ கவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஓஹியோ மாகாண ஆளுநா் மைக் டிவைன் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளாா்.