பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை...
மணிலா : பிலிப்பின்ஸில் இன்று (ஜூன் 8) ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதன் பின்விளைவுகளால் ஏற்பட்ட உயிர்ப்பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது.
தீவு நாடான பிலிப்பின்ஸில் இன்று காலை 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தெற்கு பிலிப்பின்ஸின் ‘மிண்டானோ’ தீவை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் தெற்கு பிலிப்பின்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 17 பேர் பலியாகினர். க்ளான் மலைப்பிரதேச நகரில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் 13 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
பிலிப்பின்ஸில் புதிய கல்வியாண்டின் முதல் நாளான இன்றைய நாளில் பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டு சேதத்தை விளைவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் வகுப்புகள் நடைபெறவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தெற்கு பிலிப்பின்ஸில் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்குள்ல் கடல் பகுதிகளில் சிறிய அளவிலான ஆழிப் பேரலைகளும் எழும்பின. இதன் தாக்கம் இந்தோனேசியா, பாலௌ மற்றும் தெற்கு ஜப்பானிலும் உணரப்பட்டது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.