பகல் பொழுதே நள்ளிரவு போல தோன்றும்! முழு சூரிய கிரகணம் எப்போது?
பகல் பொழுதே நள்ளிரவு போல தோன்றும் முழு சூரிய கிரகணம் எப்போது தோன்றுகிறது என்பது பற்றி..
வானியல் அதிசயங்களில் முழு சூரிய கிரகணம் சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழவிருக்கிறது.
வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து, சூரியனின் ஒளி பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீது விழாமல் தடுக்கும் நிகழ்வாகும்.
க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின், வடகிழக்கு போர்த்துக்கல் நாடுகள் இந்த முழு சூரிய கிரகணத்தின்போது இருண்டு விடும் என்று கூறப்படுகிறது. இங்கெல்லாம் பகல் நேரத்தில் சூரியன் முற்றிலும் மறைந்துவிடுமாம்.
Advertisement
Advertisement
அதேவேளையில், ஐரோப்பா, ஆப்ரிக்கா, வடக்கு அமெரிக்க நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் பகுதிநேர சூரிய கிரகணம் ஏற்படும்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதுபோல, ஸ்பெயினில் முழு சூரிய கிரகணமானது 1905ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
இந்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. எனினும் நாசா போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக மக்கள் நேரலையில் முழு சூரிய கிரகணத்தைக் காணலாம்.
அடுத்த முழு சூரிய கிரகணம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழவிருக்கிறது. அதுவும் ஸ்பெயின், வடக்கு ஆப்ரிக்கா, சௌதி அரேபியா, ஏமன் போன்ற நாடுகளில் மட்டுமே தென்படும் என நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் 2033ஆம் ஆண்டு மார்ச் 30 வரை முழு சூரிய கிரகணத்தைக் காண வழியேயில்லை என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அன்றைய நாளிலும் சில பகுதிகளில்தான் பார்க்க முடியும் என்றும், ஒட்டுமத்த அமெரிக்காவிலும் 2044ஆம் ஆண்டுதான் முழு சூரிய கிரகணம் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.
நேரடியாகப் பார்க்கலாமா?
முழு சூரிய கிரகணத்தை வெறுங்கண்களால் பார்ப்பது நல்லதல்ல. அதுவும் சூரியனை முற்றிலும் சந்திரன் மறைத்திருக்கும்போது, சூரியன் லேசான வெளிப்படும் நேரம் அதிக வெளிச்சத்துடன் வரும் என்பதால், கண்பார்வை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.
About when a total solar eclipse occurs, which appears like midnight during the day..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.