முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:48 am IST
பாகிஸ்தான். - கோப்புப்படம்.
பகிர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

மாகாணத்தின் அட்டாக் மாவட்ட எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும், அவா்கள் வசமிருந்த ஆயுத, வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement