உலகளாவிய விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதில் சிக்கல்! பயணிகள் வருகையைப் பாதிக்கும் கட்டண உயர்வு
கட்டண உயர்வால் விமான போக்குவரத்தை பயணிகள் குறைத்துக்கொள்ளலாம்
எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம் எதிரொலியாக உலகளாவிய விமான போக்குவரத்தில் கட்டண உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
கடந்த மாதம்(பிப்ரவரி) ஈரான் மீதான போர் தொடுக்கப்படுவதற்கு முன்பு வரை, இந்த ஓராண்டில்(2026) விமான போக்குவரத்து துறை கணிசமான லாபத்தை ஈட்டியது. 2026-இல் அத்துறைக்கு 4,100 கோடி டாலர் (41 பில்லியன் டாலர்) கிட்டியது.
கரோனா (கோவிட் - 19) பெருந்தொற்று அச்சுறுத்தலுக்குப் பிந்தைய விமான போக்குவரத்தில் ஏற்றம் ஏற்பட்டது. கடந்தாண்டில், கரோனோ பெருந்தொற்றுக்கு முந்தைய நிலவரத்தைவிட 9 சதவீதம் கூடுதல் ஏற்றம் கண்டுள்ளது விமான போக்குவரத்துத்துறை. பயணிகள் வரத்து அதிகரிப்பால் விமான கட்டணம் நிர்ணயித்தல் அணுகுமுறையில் அதிகாரத்துடன் திகழ்ந்து வருகின்றன அத்துறைசார் நிறுவனங்கள்.
இந்நிலையில், இப்போது எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச சமூகத்தில் விமான கட்டணம் உயர்த்தப்படுவதால், பயணிகள் வருகை குறையலாம் என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெட் எரிபொருள் விலை சுமார் இருமடங்கு வரை அதிகரித்தலால், விமான நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளில் மாற்றம் மற்றும் புதிய வியூகங்களை வகுக்க தள்ளாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, எரிபொருள் குறைவாக பயன்படுத்தி அதன்மூலம் இயங்கும் நவீன விமானங்கள் அதிக எண்ணிக்கையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுவது விலையேற்றத்தை குறைக்க உதவும். ஆனால், நவீன விமானங்கள் விநியோகம் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளது.
உலகளவில் எரிவாயு மற்றும் பிற எரிபொருள் விலை நிலைத்தன்மையற்ற சூழலில் இருப்பதாலும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாலும் பயணிகளின் விமான போக்குவரத்து இயல்புநிலையிலிருந்து குறையவே அதிக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் லாபத்தை நோக்கிய வளர்ச்சியில் வேகத்தடை ஏற்பட்டுள்ளது.