FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

போர் பாதிப்பு! சௌதிக்கு ரூ. 47,245 கோடிக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா!

சௌதி அரேபியாவுக்கு ரூ. 47,245 கோடிக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்...

5 செப்டம்பர் 2026, 12:51 pm IST
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் - அமெரிக்க அதிபர் டிரம்ப் - ANI
பகிர்:

சௌதி அரேபியாவுக்கு ரூ. 47,245 கோடி மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரில், பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாகக் கருதப்படும் சௌதி அரேபியா தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சௌதி அரேபியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்து நடவடிக்கையாக ரூ. 47,245 கோடி (5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிலான வெடிகுண்டுகள், வழிகாட்டும் உபகரணங்கள் ஆகியவற்றை விற்பனைச் செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக, வெள்ளிக்கிழமை (செப். 5) அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன்மூலம், நேட்டோ படையைச் சேராத ஒரு நட்பு நாட்டின் வான் பாதுகாப்பு திறன் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் உடனான அமெரிக்காவின் போர் தொடங்கியது முதல், சௌதி அரேபியாவின் பல்வேறு முக்கிய நகரங்களை ஈரானிய படைகள் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகின்றன.

இத்துடன், ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ள யேமனின் ஹௌதி படைகளும் செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

the US government has approved the sale of weapons, including bombs, worth ₹47,245 crore to Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments