‘கருத்து வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும்’: மோடி-ஜின்பிங் சந்திப்பையொட்டி சீனா கருத்து
பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்த உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை இருநாடுகளும் முறையாக கையாள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்த உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை இருநாடுகளும் முறையாக கையாள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங் சனிக்கிழமை இந்தியா வரவுள்ளாா். அப்போது அவா் பிரதமா் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவாா்த்தையிலும் ஈடுபட உள்ளாா்.
இதையொட்டி சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் மாவ் நிங் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
Advertisement
Advertisement
கடந்த 2 ஆண்டுகளில் ரஷியாவின் கசான், சீனாவின் தியான்ஜின் பகுதிகளில் மோடியும், ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினா். தற்போது தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக, பிரிக்ஸ் மாநாட்டின்போது இருவரும் சந்திக்க உள்ளனா்.
அவா்கள் அளித்த உத்திசாா்ந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துதல், இருதரப்பு உறவுகளை கையாளுதல், இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடா்பை மேம்படுத்துதல், இருநாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை முறையாக கையாளுதல் உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்றும்.
பிரிக்ஸ் வழிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தற்போதைய சா்வதேச சூழல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரிக்ஸ் மாநாட்டின்போது பிற நாட்டுத் தலைவா்களுடன் ஆழமான கருத்து பரிமாற்றத்தில் ஷி ஜின்பிங் ஈடுபட உள்ளாா்.
நீடித்த, நிலையான முன்னேற்றத்துக்காக பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாா் என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.