செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி இன்று மேலும் 291 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இன்று பதிவானது அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். நேற்று 52,000 பேர் பாதிக்கப்பட்டிருந்ததே இதுவரை அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்து வந்தது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் மேலும் 211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,964 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,21,896 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் அதிகபட்சமாக இன்று 2,082 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று புதிதாக 4,329 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
மேற்குவங்க பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
திருப்பதி கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயுல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விரிவான செய்திக்கு..
அறிகுறி இல்லாமல், கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் லேசான அறிகுறி இருப்பவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
43 வயது நபர் நெஞ்சு வலி மற்றும் இருமலுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நிலையில், 9 மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸிலேயே மரணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கொல்கத்தாவில் மருத்துவரின் சான்றிதழ் கிடைக்காததால், கரோனா பாதித்து உயிரிழந்த 71 வயது முதியவரின் உடலை குடும்பத்தினர் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். விரிவான செய்திக்கு..
கரோனா பாதித்து அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி உடையவர்களும், 50 வயதுக்கு உட்பட்டவர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,718 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,67,883 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,330 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,373 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 160 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 1,502 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,316 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதன்முறையாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 59.52% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இன்று தொடக்கி வைத்தார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை எட்டி வெறும் 5 நாள்களில், கரோனா பாதிப்பு ஆறு லட்சத்தைத் தொட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,760 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,61,165 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,199 பேர் பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் செவ்வாய்க்கிழமை 2,393 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக உயா்ந்துள்ளது. அதேவேளை இறப்பு எண்ணிக்கை 888-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,653 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 5,85,493 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் மேலும் 246 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் புதிதாக 2,182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,882 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று, உறுதியானதையடுத்து, அந்த வங்கியின் 2 கிளைகளும், புதன்கிழமை மூடப்பட்டது. விரிவான செய்திக்கு..
கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா பரிசோதனை செய்திருப்பது கட்டாயமல்ல என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
புதுவையில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 739 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..