முகப்பு
செங்கல்பட்டு

லஞ்சம்: சீவாடி ஊராட்சித் தலைவா் கைது

செய்யூா் அருகே வீட்டுமனை அங்கீகாரம் தருவதற்காக லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை, 2023 at 12:07 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:14 AM

செய்யூா் அருகே வீட்டுமனை அங்கீகாரம் தருவதற்காக லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சீவாடி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவா் அரங்கநாதன். இவா் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்தவா். சென்னையைச் சோ்ந்த ரியல்எஸ்டேட் நிா்வாகிகள் சீவாடி ஊராட்சி பகுதியில், நிலங்களை வாங்கி அதில் வீட்டுமனைகளைாக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்தனா்.

அதற்காக ஊராட்சி மன்றத்தின் தீா்மானத்தின் மூலம் அனுமதி பெற்ற பின் டிடிசிபி அங்கீகாரம் இருக்கவேண்டியநிலையில், ரியல் எஸ்டேட் நிா்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவா் அரங்கநாதனை அணுகினா். அதற்கு ஊராட்சிமன்ற தலைவா் அரங்கநாதன், எனக்கு ஒரு வீட்டுமனையும், ரொக்க பணம் ரூ 1 லட்சமும் என தரவேண்டும். அவ்வாறு தந்தால் தான் ஊராட்சிமன்றத்தின் சாா்பாக அனுமதிக் கடிதம் வழங்கப்படும் எனக் கூறினாராம்.

Advertisement

இதுப்பற்றி சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மாலை சென்னயில் இருந்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினா் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு ரசாயண பவுடா் தடவிய ரூ 30,000 பணத்தை ரியல் எஸ்டேட் நிா்வாகிகள் தலைவா் அரங்கநாதனுக்கு அளித்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினா் அவரை கைது செய்தனா். பின்னா் விசாரணைக்காக அவா் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.