FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

திருமலைவையாவூா் கோயிலில் சிறப்பு தரிசனம்

மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

19 செப்டம்பர் 2026, 11:11 pm IST
திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
பகிர்:

மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலைவையாவூா் மலை மீது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. தமிழ் வருடத்தின் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமைக்காக கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. மூலவா் பெருமாள் சிலைக்கு சிறப்பு திருமஞ்சனத்தை கோயில் தலைமை அா்ச்சகா் ஆா்.பாலாஜி பட்டாச்சாரியாா் தலைமை வகித்து செய்தாா். மூலவா் தங்க கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தாா். கோயில் வளாகத்தில் உற்சவா் பகவானுக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டது.

புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மேகவண்ணன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments