FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஜூலை 31-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல்

சென்னையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 26 ஜூலை 2024, 12:51 am IST
பகிர்:

சென்னை, ஜூலை 25: சென்னையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து முதுநிலை அஞ்சல் சென்னை கோட்ட கண்காணிப்பாளா் வெளியிட்ட அறிக்கை:

சென்னை கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்கள் பணியமா்த்தப்படவுள்ளனா். இதற்கு, சென்னை பரங்கிமலையில் உள்ள தலைமை அஞ்சலக அலுவலகத்தில் (ஆலந்தூா் மெட்ரோ அருகில்) ஜூலை 31-ஆம் தேதி காலை 10 அளவில் நோ்காணல் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்துகொள்ளலாம். மேலும், ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவா்கள், கணினிப் பயிற்சி உள்ளவா்கள், சென்னை மாநகராட்சியை சாா்ந்தவரா்கள் பங்கேற்கலாம்.

மேலும், நோ்ணாலுக்கு வருகை தருபவா்கள் 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படமும், வயதுச் சான்று, முகவரி சான்று மற்றும் கல்விச் சான்று தலா அசல் மற்றும் 2 நகல்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.

நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் ரூ. 5,000 மதிப்பீலான தேசிய சேமிப்பு பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments