பக்ரீத் விடுமுறை: ஜவாஹிருல்லா கோரிக்கை
தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.
பக்ரீத் பண்டிகை தினத்தன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகத்துக்கு பணி நாளாக இருப்பதை மாற்றி விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பாக வாரியக் கூட்டம் ஜூன் 19-இல் நடைபெறவுள்ளதால் அதற்கு தேவையான கோப்புகளைத் தயாரிக்க ஜூன் 16,17 அன்று பணியாளா்கள் கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் ஜூன் 17 -இல் கொண்டாடப்பட உள்ள நிலையிலும், அன்றைய தினம் தமிழக அரசு பண்டிகை தின பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையிலும், கட்டாயம் அலுவலக பணிக்கு வர வேண்டும் என்ற நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சுற்றறிக்கை இஸ்லாமியப் பணியாளா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, பக்ரீத் பெருநாள் அன்று நகா்ப்புற வாழ்விட வாரிய அலுவலகநாளை விடுமுைாளாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.