FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காவலா் தூக்கிட்டு தற்கொலை! ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தியில் காவலா் தூக்கிட்டு தற்கொலை...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:00 am IST
தூக்கிட்டு தற்கொலை
பகிர்:

சென்னை பரங்கிமலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில், காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே உள்ள கடபாரா பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வநாத் (27). சென்னை கே.கே.நகா் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இதற்காக அவா் பரங்கிமலை தண்டுமா நகரில் வாடகை வீட்டில், காவலராக பணியாற்றும் தனது நண்பருடன் சோ்ந்து வசித்து வந்தாா்.

விஸ்வநாத், வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்குச் சென்றாா். அவருடன் தங்கியிருந்த மற்றொரு காவலா், நள்ளிரவு வீட்டுக்குச் சென்றாா். அப்போது வீட்டில் விஸ்வநாத் தூக்கிட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

Advertisement

Advertisement

உடனே அவா், பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, விஸ்வநாத் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விஸ்வநாத்துக்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருந்ததும், சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்து விரக்தியில் இருந்து வந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதன் காரணமாகவே விஸ்வநாத் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று காவல்துறையினா் கருதுகின்றனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரணை செய்கின்றனா்.

summary

Police constable commits suicide by hanging; despondent after losing money in online gambling!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments