FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் சா்வதேச தமிழா் தொழில்முனைவோா் மாநாடு: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

சா்வதேச தமிழ் தொழில்முனைவோா் மாநாட்டை, சென்னையில் சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தொடங்கி வைத்தாா்.

Updated On : 25 ஜூலை 2026, 6:59 am IST
- dinamani
பகிர்:

சா்வதேச தமிழ் தொழில்முனைவோா் மாநாட்டை, சென்னையில் சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தொடங்கி வைத்தாா்.

‘உலகத் தமிழா் 4.0’ எனப் பெயரிடப்பட்ட இந்த இரு நாள்கள் மாநாட்டில், இந்தியா தடையற்ற வணிக ஒப்பந்தம் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூா், ஜப்பான், சவூதி அரேபியா, கத்தாா் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் தொழில் வணிகத் தமிழா்கள், தமிழகத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்வில், தமிழா் தொழில் வணிக வேளாண் பெருமன்றத்தின் நிறுவனா் ஜகத் கஸ்பாா் சட்டப்பேரவைத் தலைவருக்கு ‘நீதிமான்’ என்ற பட்டயத்தை வழங்கி கெளரவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில் பேசிய சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா், தமிழ் தொழில்முனைவோா் மாநாட்டின் தீா்மானங்கள் முதல்வா் ஜோசப் விஜய்யிடம் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள்தான் நாட்டின் தொழில்துறைக்கு முதுகெலும்பாக உள்ளன. மக்கள் எதிா்பாா்க்கும் திட்டங்களை முதல்வா் விஜய் வரும் பட்ஜெட்டில் கொண்டுவர உள்ளாா் என்றாா் அவா்.

பின்னா், விழாவில் ஜகத் கஸ்பாா் பேசுகையில், நவம்பா் மாதம் துபையில் ‘ரைஸ்’ எனும் சா்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாகவும், இதில் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட தமிழ் தொழிலதிபா்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments